வடிவேலு நடித்து வரும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, மைசூர் பகுதியில் நடைபெற்று வந்தது. அதில் வடிவேலுவுடன் பல நகைச்சுவை நடிகர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. அந்தக் காட்சிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்து வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பியதாக தயாரிப்பு நிறுவனம் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மேலும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் படக்குழு கூறியுள்ளனர். ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், நடிகர் வடிவேலு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சேலத்தில் நடைபெறும் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் வடிவேலுவை, இயக்குனர் மாரிசெல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் மாலை அணிவித்து வரவேற்று உற்சாகப்படுத்தி உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/s9ObRku
0 Comments