
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
‘துருவங்கள் பதினாறு’, ‘மாஃபியா’ படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் தற்போது சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ’மாறன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம், தீபாவளி அல்லது பொங்கலுக்கு ஓடிடியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கார்த்திக் நரேன் தனது அடுத்தப் படத்தில் அதர்வா முரளியுடன் இணையவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், அதர்வா முரளி சூர்யா தயாரிப்பில் பாலா இயக்கும் ஒரு புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3Ehc9Iv



0 Comments