இயக்குநர் ராம் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
‘மாநாடு’ வெற்றிக்குப்பிறகு சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘வெந்து தணிந்தது காடு’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடந்தது. ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
‘கொரோனா குமார்’ படத்தின் படப்பிடிப்பு என இந்த மூன்று படங்களிலும் நடித்தப் பிறகு சிம்பு இயக்குநர் ராம் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் ராம் தற்போது நிவின் பாலி - அஞ்சலி இணையும் படத்தினை இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3DjQj6e
0 Comments