Ad Code

Responsive Advertisement

”மறைக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ கதை போல் இனி பல கதைகள் வரும் ” - பா.ரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித் ஜெய் பீம் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியிருக்கிறார்.

இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய ஒரு வழக்கினையே அடிப்படையாகக் கொண்டு ‘ஜெய் பீம்’ படத்தினை எடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சாதி எதிர்ப்பையும்,சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே-இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும்.அது நம் தலைமுறையை மாற்றும். ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த திரு.சூர்யா சாருக்கும் இயக்குநர் ஞானவேலுக்கும் பெரும் நன்றிகள்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக, ‘ஜெய் பீம்’ படத்தின் தலைப்பை இயக்குநர் பா.ரஞ்சித்தான் பதிவு செய்து வைத்திருந்திருக்கிறார். அதனை, ரஞ்சித்திடமிருது படக்குழு பெற்றிருக்கிறது. இதுகுறித்து நடிகர் சூர்யா சமீபத்தில் பேசும்போது, “இந்தப் படத்திற்கு ‘ஜெய் பீம்’ என்று தலைப்பு வைக்க முடிவு செய்தோம். ஆனால், தலைப்பை இயக்குநர் பா.ரஞ்சித் சார் பதிவு செய்து வைத்திருந்தார். ‘ஜெய் பீம் தலைப்பை வைத்துக்கொள்ளலாமா?’ என்று கேட்டேன். ’தாராளமா வச்சிக்கோங்க சார். ‘ஜெய் பீம்’ எல்லோருக்கும் பொதுவான வார்த்தை’ என்று அனுமதி கொடுத்தார். ரஞ்சித் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். அவருக்கு பெரிய மனசு” என்று கூறியிருந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2ZGz5BS

Post a Comment

0 Comments