Ad Code

Responsive Advertisement

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி: குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லிய சிவகார்த்திகேயன்

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

46 வயதான பிரபல கன்னட நடிகர் புனித ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையொட்டி, அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர்.

imageஅவரது உடலுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராணா டகுபதி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் பிரபுதேவா, அர்ஜுன் உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

image

இந்த நிலையில், இன்று நடிகர் சிவகார்த்திகேயன் புனித் ராஜ்குமார் அண்ணன் சிவராஜ்குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் கற்பூரம் கொளுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mDXotn

Post a Comment

0 Comments