
கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்கவர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதை ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து வைரமுத்து வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம். கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்” என தெரிவித்திருக்கிறார்.
இதனைப்படிக்க...டி20 உலகக்கோப்பை: மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது தென்னாப்ரிக்கா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3pGTbqs



0 Comments