Ad Code

Responsive Advertisement

க்ரைம் த்ரில்லர் படத்தில் அர்ஜுனுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்

அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

’திட்டம் இரண்டு’, ‘பூமிகா’ படங்களுக்குப் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபுதேவாவின் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் அர்ஜுனுடன் இணையும் புதிய க்ரைம் த்ரில்லர் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அருள் குமார் தயாரிக்க தினேஷ் லக்‌ஷ்மணன் இப்படத்தை இயக்குகிறார்.

image

தயாரிப்பாளர் அருள் குமார் படம் குறித்து பேசும்போது ”இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இது மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட திரைப்படம். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்திம் படத்தில் மிகவும் முக்கியத்துவம் மிகுந்த கதாப்பாத்திரமாகும். இயக்குனர் தினேஷ் லக்ஷ்மணன் திரைக்கதையை முதன்முதலில் விவரித்தபோது, நான் பார்வையாளராக மிகவும் ரசித்தேன். திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு க்ரைம்-த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் வகைகளில் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும். நடிகர் அர்ஜுன் இந்த வகையைச் சேர்ந்த திரைப்படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், இப்படம் அதிலிருந்து மாறுபட்டு, தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்" என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3tnYUkN

Post a Comment

0 Comments