தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு படத்தை இலவசமாக நடித்துக்கொடுக்க திட்டமிட்டிருக்கிறேன் என விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
‘கோடியில் ஒருவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விஜய் ஆண்டனி கோடியில் ஒருவன் சிறப்பாக உருவாகியுள்ளதாக கூறினார். மேலும் தனக்கு பல பிரச்னைகள் உள்ளது. அவை அனைத்தும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். அதன்பின் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு படத்தை நடித்துக்கொடுக்க திட்டமிட்டிருக்கிறேன் என நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.சிவாவிடம் கூறினார்.
சூர்யா - வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இணையும் அமீர்
ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் இரண்டு தயாரிப்பாள் சங்கம் இருப்பதால் அந்தப் படம் எந்த சங்கத்திற்காக இருக்கும் என கேள்வி எழுந்தது. இது குறித்து டி.சிவாவிடம் கேட்டபோது, ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கே நடித்துக்கொடுக்கட்டும் எங்களுக்கு வேண்டாம் என்று புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2X67qcw
0 Comments