விநாயகர் சதுர்த்தியையொட்டி தனது வெப் சீரிஸ் பணிகளைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த்
‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திற்குப் பிறகு இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் ’புது வெள்ளம் பொன்னியின் செல்வன்’ வெப் சீரிஸை இயக்குவதாக கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவித்தார். ஆனால், அதற்கடுத்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது விநாயகர் சதுர்த்தியையொட்டி எங்கள் வெப் சீரிஸ் பணிகளை தொடங்கி விட்டோம் என்று உற்சாகமுடன் அறிவித்திருக்கிறார் செளந்தர்யா ரஜினிகாந்த். எம்.எக்ஸ் நிறுவனமும் செளந்தர்யா ரஜினிகாந்தும் இணைந்து இந்த வெப் சீரிஸை தயாரிக்கிறார்கள். சரத் ஜோதி இயக்குகிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3C4afdf
0 Comments