Ad Code

Responsive Advertisement

தமிழ் சினிமாவில் நகைச்சுவை இயக்குநர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை- ராம் பாலா வேதனை

”தமிழ் சினிமாவில் நகைச்சுவை இயக்குனர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை” என இயக்குனர் ராம்பாலா வேதனை தெரிவித்துள்ளார்.

தில்லுக்கு துட்டு,  தில்லுக்கு துட்டு 2 ஆகிய படங்களை இயக்கியவர் ராம்பாலா. இவர் தற்போது மிர்ச்சி சிவா நடிப்பில் இடியட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் இப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் ராம்பாலா, தமிழ் சினிமாவில் நகைச்சுவை இயக்குனர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை என வேதனை தெரிவித்தார். 

மேலும், ”மக்களை ரசிக்க வைக்கக்கூடிய படங்களைக் கொடுக்கும் இந்த இயக்குனர்களுக்கு மத்திய அரசு விருது கொடுக்க வேண்டும். ஆனால், கத்தி எடுத்துக் கொண்டு கருத்து சொல்கிறோம் என்று கூறக்கூடிய இயக்குனர்களுக்குதான் அங்கீகாரம் கிடைக்கிறது. மக்களை ரசிக்க வைக்க நகைச்சுவை எழுதுவது மிகக்கடினம். அந்த வேலையை நாங்கள் செய்து வருகிறோம். எனவே நகைச்சுவை படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் நிலை ஏற்படவேண்டும். அங்கீகாரம் கிடைக்காததால் சம்பளத்தில் கூட லட்சங்களை தாண்டுவதில்லை” எனவும் குறிப்பிட்டார்.

image

இந்த நிகழ்வில் இயக்குனர் ராம் பாலாவுடன் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், மயில்சாமி, ரவிமரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- செந்தில்ராஜா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3z3WJEz

Post a Comment

0 Comments