தலைவி திரைப்படத்தை பார்க்க குழந்தை போன்ற ஆர்வத்துடன் காத்திருப்பதாக கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றைக்கொண்டு எடுக்கப்பட்டுள்ள தலைவி திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இவர் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார். அப்போது தலைவி திரைப்படத்தை இன்னும் தான் பார்க்கவில்லை எனவும், எனவே படத்தை பார்க்க குழந்தைபோல் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் நடித்த அரவிந்த்சாமி, தம்பி ராமையா, சமுத்திரகனி, பாக்யஸ்ரீ உள்ளிட்ட நடிகர்களை பாராட்டினார். அப்போது தலைவி திரைப்படத்தில் ஜானகி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மதுபாலாவை வெகுவாக பாராட்டினார்.
"குறிப்பாக, பாலிவுட்டில் இதுபோன்ற ஒரு நடிகையை பார்த்ததில்லை. அங்கு யாரும் நீண்டநாட்கள் நட்புடன் பழக மாட்டார்கள். ஆனால் மதுபாலா தன்னுடன் நீண்டகாலமாக நட்பில் இருக்கிறார்" என பேசினார். நான்கு முறை தேசிய விருது வென்றுள்ள கங்கனா ரணவத், பாலிவுட்டில் உள்ள பல நட்சத்திரங்களுடன் நட்பு பாராட்டுவது இல்லை. குறிப்பாக, அங்குள்ள நடிகர், நடிகை மற்றும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரின் செயல்பாடுகள் குறித்தும் பொது தளத்தில் விமர்சித்துள்ளார். இந்த நிலையில் மதுமிதாவின் நட்பு குறித்து பேசிய அவர், பாலிவுட் நட்சத்திரங்களை விமர்சித்துள்ளார் என்றே பேசப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2WLfkrn
0 Comments