Ad Code

Responsive Advertisement

நடிகை கங்கனா ரனாவத் மீதான வழக்கை ரத்து செய்ய மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு

இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி, நடிகை கங்கனா ரனாவத் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு அளித்த தொலைக்காட்சி நேர்காணலின்போது தன்னை பற்றி ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை கங்கனா ரனாவத்திற்கு எதிராக இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கடந்த நவம்பர் மாதம் அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, ஜாவேத் அக்தரின் புகார் குறித்து விசாரிக்க காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
image
இதனிடையே நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து நடிகை கங்கனா ரனாவத் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என கங்கனா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2YK8HXv

Post a Comment

0 Comments