Ad Code

Responsive Advertisement

மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி: ஜெயம் ரவியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியீடு

நடிகர் ஜெயம் ரவி - ப்ரியா பவானிசங்கர் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

’பூமி’ படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வந்தார். சமீபத்தில், இப்படத்தில் ஜெயம் ரவியின் காட்சிகள் நிறைவடைந்ததையொட்டி அடுத்தப் பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘பூலோகம்’ படத்தின் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் தான், இப்படத்தையும் இயக்குகிறார்.

image

இது ஜெயம் ரவியின் 28 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் கல்யான கிருஷ்ணன் மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாராட்டுக்களையும் கவனத்தையும் ஈர்த்த ‘பூலோகம்’ படத்திற்கு எஸ்.பி ஜனநாதன் வசனம் எழுதியிருந்தார்.

image

இந்த நிலையில் ஜெயம் ரவி - கல்யாண கிருஷ்ணன் வெற்றிக்கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.ஜெயம் ரவிக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/38Xp1WE

Post a Comment

0 Comments