Ad Code

Responsive Advertisement

இந்தியன் 2 பட பிரச்னை: பேச்சுவார்த்தை நடைபெறுவதாக லைகா - ஷங்கர் தரப்பு தகவல்

இந்தியன் 2 பட பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து லைகா சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

image

அப்போது, லைகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லைகா மற்றும் ஷங்கர் தரப்பில் தனிபட்ட முறையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், இதற்கு தீர்வு காணும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருவதால் பேச்சு வார்த்தை முடித்து முடிவு காண்பதற்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என லைகா தரப்பில் தெரிவிக்கபட்டது.

இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவது உண்மை தான் என்று ஷங்கர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zFBwSr

Post a Comment

0 Comments