பீஸ்ட் படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் தன்னுடைய 67வது படத்துக்காக மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணையப் போகிறார் என்பது அதிகாரப்பூர்வ தகவலாக வெளியாகியிருக்கிறது.
இதற்கான ஸ்க்ரிப்டிங் வேலையில் லோகேஷ் ஈடுபட்டு வரும் வேளையில் இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் நடப்பாண்டு அக்டோபரில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை லலித் குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்க இருக்கிறதாம். இதுபோக மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக இணைவதாகவும் தகவல்கள் கசிந்திருக்கிறது.
அதேபோல, கேங்ஸ்டர் படமாக பான் இந்தியா முழுவதும் வெளியாகப் போகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இளைஞர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக இருக்கும் த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், கே.ஜி.எஃப் - 2 படத்தில் அதீராவாக வந்து மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விஜய்யின் 67வது படத்தில் வில்லனாக நடிக்கப் போவதாகவும் அதற்கான சம்பளமாக 10 கோடி ரூபாய் பெறப்போவதாகவும் கோலிவுட் உலகில் பேசப்பட்டு வருகிறது. மேலும் அஜித்தை போல சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வில்லத்தனத்தை காட்டப் போவதாகவும் சமூக வலைதளத்தில் வெளியான செய்திகள் மூலம் அறியமுடிகிறது.
அண்மை காலமாக இந்தி திரையுலகில் வெளியாகும் படங்களுக்கு பதிலாக தென்னிந்திய படங்களுக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், சஞ்சய் தத் போன்ற பாலிவுட் பிரபலங்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்களில் தோன்றுவது பெரும் வரவேற்பை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2D1Ygme
0 Comments