Ad Code

Responsive Advertisement

`நடிகை ஷோபிதா துலிபாலா பற்றி என்ன நினைக்கிறீர்கள்’- முதல்முறை மனம்திறந்த நாக சைதன்யா!

`பாலிவுட் நடிகை  ஷோபிதா துலிபாலாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கின்றீர்களா?’ என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவுடனான விவாகரத்து குறித்தும் மனம்திறந்து பேசியுள்ளார்.

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா உறவு முறிவு, மீண்டுமொரு முறை இணையத்தில் பல பேரை பேச வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், சமந்தா பங்குபெற்ற `காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியும் அதில் அவர் பேசிய முக்கியமான விஷயங்களும். அவற்றை தொடர்ந்து தற்போது நாகசைதன்யாவும் தங்கள் உறவு முறிவு குறித்து பேசியிருக்கிறார்.

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தா பேசிய முக்கியமான விஷயமாக இருந்தது- `விவாகரத்து என்ற முடிவுக்கு வந்தபோது மிகவும் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது நன்றாகவே இருக்கிறது. கடினமான தருணங்களை கடந்து, இயல்பான நிலைக்கு வந்துவிட்டேன். முன் எப்போதும் இல்லாத அளவு இப்போது மிகவும் வலிமையானவளாக இருக்கிறேன்’ என்றார்.

image

இதைக்குறிக்கிட்டு பேசிய கரண் ஜோஹர், `நாக சைதன்யாவுக்கும் உங்களுக்குமிடையே கசப்பான அனுபவங்கள் ஏதுமிருந்ததா’ எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த சமந்தா, `கூர்மையான பொருட்களை மறைத்துவைத்துள்ள ஒரு அறையில், எங்களை அடைத்து வைத்தால் எப்படியிருக்குமோ அப்படியே இருந்தது. இப்போதும்கூட அப்படியுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் இதுவும் மாறலாம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து சமந்தா - நாக சைதன்யாவுடனான உறவு, மீண்டும் இணையத்தில் பேசுபொருளானது. பலரும் சமந்தாவின் அழுத்தமான பதிலுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

image

இந்நிலையில் தற்போது தனது `லால் சிங் சத்தா’ என்ற படத்தின் ப்ரமோஷனில் ஈடுபட்டிருக்கும் நடிகர் நாகசைதன்யாவிடம் ஆங்கில ஊடகமொன்று சமந்தாவுடனான உறவு முறிவு குறித்து கேட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள நாக சைதன்யா, “எங்கள் இருவருக்குமான உறவு முறிவை பொறுத்தவரை, சமந்தா இதிலிருந்து கடந்து சென்று விட்டார். நானும் கடந்து வந்துவிட்டேன். ஆனால் இதுகுறித்தெல்லாம் எல்லோருக்கும் நான் அறிவிக்க வேண்டுமென்பது, எனக்கு தேவையில்லாத வேலையென நான் நினைக்கிறேன்” என்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து `உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை இப்போது பேசுபொருளாக இருப்பதை எப்படி பார்க்கின்றீர்கள்?’ என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எதிர்பாராவிதமாக இந்த தொழிலில் (சினிமா) இருப்போருக்கு, தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது ஒருபகுதியாகிவிட்டது. இது இந்தத் தொழில் சுமக்கும் ஒருபகுதியதாக இருக்கிறது. ஆகவே இதுபோன்ற விஷயங்கள் என்னை தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. இருப்பினும் இது ஏற்படுத்தும் அசௌகரியம் குறித்து, ஒவ்வொரு பிரபலமும் பேச வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

image

என்னுடைய தொழில் வாழ்க்கை பேசுப்பொருளாகாமல், தனிப்பட்ட வாழ்க்கை பேசுபொருளாகி இருப்பது எனக்கு வேதனையாக உள்ளது. `தனிப்பட்ட’ என்று சொல்வதன் அர்த்தமே அது தனிப்பட்ட விஷயமாகவே இருந்துவிட வேண்டுமென்பதுதானே... பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வம் எனக்கு புரிகிறது. இதை தடுக்க என்னுடைய தொழில் வாழ்க்கையில் நான் இன்னும் தீவிரமாக உழைக்கவேண்டுமென நினைக்கிறேன். ஏனெனில் தனிப்பட்ட வாழ்வில் கசப்பான நிகழ்வுகளெல்லாம் வரும், போகும்.

எப்போதுமே ஒரு செய்தியை இன்னொரு செய்தி மறக்கடிக்கும். அந்தவகையில் எல்லாமே தற்காலிகமானது தான். நான் அதற்கு ரியாக்ட் செய்தால்தான் அது பெரிதாகும். ஆகவே நான் எதற்கும் ரியாக்ட் செய்யவில்லை. நடப்பது நடக்கட்டும். இதுவும் மறைந்துபோகும். மட்டுமன்றி சமந்தாவுடனான பிரிவு குறித்து பொது வெளியில் எதுவும் பகிராமல் இருக்கவே நான் விரும்புகிறேன்.

image

நானும் சமந்தாவும் என்ன சொல்ல நினைத்தோமோ, அதை வெளிப்படையாக எங்களின் பிரிவு அறிக்கையிலேயே தெரிவித்துவிட்டோம். என் தனிப்பட்ட வாழ்வில், அது மட்டுமே பொது வெளிக்கு தெரிந்தால் போதுமானது என்று நான் நினைக்கிறேன். இப்போது மீண்டும் எல்லாமே கேட்கப்படும்போதும் நான் சொல்ல நினைப்பது - `உறவு முறிவு ஏற்படுத்திய தாக்கங்களிலிருந்து சமந்தா வெளிவந்துவிட்டார். நானும் வெளிவந்து விட்டேன்’. அவ்வளவுதான். வேறு எதையும் உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. இதை தெரிவிப்பதேவும், தேவைக்கு அதிகமாக தெரியப்படுத்தப்பட்ட விஷயமாகவே இருக்கிறதென நினைக்கிறேன்’’ என்றுள்ளார்.

மேலும் நாக சைதன்யாவிடம் `நடிகை ஷோபிதா துலிபாலா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று அந்த பேட்டியில் கேட்கப்பட்டது. ஷோபிதாவுடன் நடிகர் நாக சைதன்யா தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல் பரவிவரும் நிலையில், அப்புகைப்படத்திற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ள அவர், `நான் சிரித்துக்கொண்டேதான் இருக்கபோகிறேன்’ என்று மட்டும் சொல்லியுள்ளார்.

image

சமந்தாவை தொடர்ந்து, நாக சைதன்யாவும் உறவிலிருந்தும் தாக்கத்திலிருந்தும் வெளிவந்துவிட்டதாக பேசியிருப்பது ஆரோக்கியமான விஷயமாக அவர்களின் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

தகவல் உதவி: Siddharth Kannan

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/9jvPaYU

Post a Comment

0 Comments