Ad Code

Responsive Advertisement

மீண்டும் வட சென்னை பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் - வெளியான தகவல்

மீண்டும் வட சென்னை பெண்ணாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் நடித்து வெளியான 'காக்கா முட்டை', 'கனா' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, 'டிரைவர் ஜமுனா', 'மோகன்தாஸ்', 'தீயவர் குலைகள் நடுங்க' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

image

இந்நிலையில். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘லாக்கப்’ படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லி இயக்கத்தில், பெயரிடப்படாத புதியப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான 'வட சென்னை' படத்திற்குப்பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் மீண்டும் வட சென்னை பெண்ணாக நடிக்கவுள்ளார். யாராலும் தோற்கடிக்க முடியாத வலிமை நிறைந்த விற்பனையாளராக நடிக்கும் அவருடன், லஷ்மி பிரியா, ரெடின் கிங்ஸ்லி, தீபா சங்கர், சுனில் ரெட்டி, ஷா ரா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். மகளிர் தினத்தையொட்டி இந்தப் படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/e3Str8R

Post a Comment

0 Comments