பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார்.
வால்டர் திரைப்படத்தின் இயக்குநர் அன்பரசன் இயக்கும் புதிய படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படம் குறித்து பேசிய அன்பரசன், ''இப்படத்தில் இரண்டு பெண் நாயகிகள் இருப்பார்கள், அவர்களில் ஒருவராக நடிக்க வாணியை ஒப்பந்தம் செய்துள்ளோம்.
நான் அவரது படங்களை பார்த்திருக்கிறேன். ஒரு இயல்பான நடிப்பு மற்றும் நான் எழுதிய கதாபாத்திரத்திற்கு அவரை போன்ற ஒருவர் தேவைப்பட்டார். இப்படத்தில் வாணி செவிலியராக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மேலும் அது படத்திற்கு நிறைய வெயிட்டேஜையும் கொண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/dNDQRfZ
0 Comments