Ad Code

Responsive Advertisement

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ டீசர் குறித்த அப்டேட் - படக்குழு வெளியீடு

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் குறித்த அப்பேட்டை படக்குழு அதிகாரபூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

‘பசங்க 2’ படத்திற்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில், தமிழ் திரையிலகின் முன்னணி நடிகரான சூர்யா இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் சூரி, வினய் ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

image

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரும் நிலையில், சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் வரும் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/GQgPbCp

Post a Comment

0 Comments