சமூக அவலங்களை வெளிக்கொண்டுவரும் படைப்பாக 'இரை' இணையத்தொடர் இருக்கும் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தூங்காவனம், கடாரம்கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா, தற்போது 'இரை' என்ற இணையத்தொடரை இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கும் அந்த இணையத் தொடரில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆஹா ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய சூழலில் குழந்தைகளுக்கு என்ன நடக்கும்? நடக்கிறது? என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் இரை இணையத்தொடர் இருக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: அந்நியனுக்குப் பிறகு விக்ரமை சரியாக பயன்படுத்தியுள்ளீர்கள் கார்த்திக்: அல்போன்ஸ் புத்திரன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/JS7f3nV
0 Comments