Ad Code

Responsive Advertisement

”விஜய் ஆண்டனி நடிப்பில் நிறையவே தேறிவிட்டார்” - விஜய் மில்டன்

”விஜய் ஆண்டனி நடிப்பில் நிறைய தேறிவிட்டார்” என்று பாராட்டியுள்ளார் இயக்குநர் விஜய் மில்டன்.

‘கடுகு’ படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் தற்போது கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் ‘பைராகி’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அதேசமயம், விஜய் ஆண்டனியுடன் ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தினையும் இயக்கி வருகிறார். சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில், விஜய் மில்டன் படம் குறித்து மனம் திறந்துள்ளார்.

”நானும் விஜய் ஆண்டனியும் நீண்ட வருடங்களாகவே நெருங்கிய நண்பர்கள்’ நான் இயக்குநராக முயற்சித்த போது, அவர் நடிகராக முயற்சித்தார். சமீபத்தில், அவரை சந்தித்தப்போது அவரிடம் இந்த கதையை சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே ஆரம்பித்து விட்டோம். இப்படம், ஒரு உணர்ச்சிகரமான ஆக்சன் படமாக இருக்கும்.

வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் எந்த சொந்தமும் இல்லாமல் ஒரு புதிய இடத்திற்கு வருபவனுக்கு வாழ்க்கை அம்மா, தங்கை என எல்லாவற்றையும் கொடுக்கிறது. எதுவும் இல்லாத ஒருவனை, எல்லாம் இருக்கும் ஒருவன் என்னவேண்டுமானலும் செய்யலாம் என நினைக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள்தான் இந்தப்படத்தின் மையம். நான் ஆரம்ப காலத்தில் பார்த்த விஜய் ஆண்டனி இப்போது இல்லை, நடிப்பில் அவர் நிறைய தேறிவிட்டார். இந்தப்படம் அவருக்கு ஒரு புது அடையாளம் தரும். அவர் இன்னும் பெரிய உயரத்திற்கு செல்வார்.

image

image

image

image

image

சரத்குமார் என் நண்பர் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் மிடுக்காக வருகிறார். விஜயகாந்த் இதில் நடிக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்ட செய்தியும் உண்மைதான். அவருக்கு ஒரு பெரிய மனிதர் பாத்திரம். அவரை திரையில் பார்க்க எனக்கு ரொம்பவும் ஆசை. அவரிடம் கதை சொல்லிவிட்டேன். நடிக்கிறேன் என கூறியிருக்கிறார், காலமும் அவர் உடல் நிலையும் ஒத்துழைத்தால், அடுத்த கட்டப் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார். ஒரு அழகான காதலியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். மிக திறமையான பெண் இப்படம் அவர் திறமைக்கு சான்றாக இருக்கும். ரசிகர்கள் எதிர்பார்க்காத மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் இருக்கிறது. மனதை அசைத்து பார்க்கும் ஒரு அழகான அனுபவத்தை இந்தப் படம் தரும்” என்றார்.

இப்படத்தினை எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவும் செய்துள்ளார் விஜய் மில்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/noEPYJQ

Post a Comment

0 Comments