
பாலிவுட் நடிகை கரினா கபூருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகைகள் கரினா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருவரும் கொரோனா விதிமுறைகளை மீறியதாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரும் கடந்த வாரம் ஒரு கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யுமாறு மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ynTfh8



0 Comments