Ad Code

Responsive Advertisement

பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

திரையிசை பின்னணி பாடகர், நடிகர் என பன்முக திறன் கொண்ட மாணிக்க விநாயகம் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 'தில்' திரைப்படத்தில் 'கண்ணுக்குள்ள கெளுத்தி' பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர். அப்போது முதல் அவர் பாடிய பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. தனித்துவமிக்க காந்தக் குரலால் ரசிகர்களை ஈர்க்கும் வல்லமை படைத்தவர். சுமார் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.

image

நடிகர் தனுஷின் 'திருடா திருடி' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமனார். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். பிரபல பரதநாட்டிய ஆசிரியரான வழுவூர் ராமையா பிள்ளையின் மகனான பாடகர் மாணிக்க விநாயகம், ஏராளமான பக்திப் பாடல்களை பாடி இசையமைத்துள்ளார். அவரது உடல் திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், துன்பமானாலும், துள்ளலானாலும், தனது குரல் வளத்தால் அவ்வுணர்வுகளை துள்ளியமாகக் கடத்தி விருந்தளித்தவர். பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்தவர் வழுவூர் மாணிக்க விநாயகம் என்று தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/32GBT3C

Post a Comment

0 Comments