Ad Code

Responsive Advertisement

கர்ப்பிணியாக இருப்பதால் ’ராஜா ராணி 2’ சீரியலிலிருந்து விலகுகிறேனா? -ஆல்யா மானசா விளக்கம்

கர்ப்பிணியாக இருப்பதால் ’ராஜா ராணி 2’சீரியலிலிருந்து ஆல்யா மானசா விலகுகிறார் என்று தகவல் வெளியானதற்கு விளக்கம் அளித்துள்ளார் ஆல்யா.

சீரியல் நாயகிகளில் முன்னணி நடிகையான ஆல்யா மானசா ‘ராஜா - ராணி’, சீரியலுக்குப் பிறகு தற்போது ‘ராஜா - ராணி 2’ சீரியலில் நடித்து வருகிறார். ஐபிஎஸ் படிக்க ஏங்கும் துணிச்சலான குடும்பத்தலைவி கதாபாத்திரத்தில் நடிப்பில் கவனம் ஈர்த்து வருகிறார். டிஆர்பியிலும் இந்த சீரியல் 4 வது இடத்தில் இடம்பிடித்துள்ளது . ’ராஜா ராணி’ சீரியலின் போதே ஆல்யாவும் சஞ்சீவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிகளுக்கு ஐலா என்ற மகளும் உள்ளார். சமீபத்தில் ஆல்யா மானசா கர்ப்பிணியாக இருக்கிறார் என்றும் சீரியலிலிருந்து அவர் விலகுகிறார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், தனது யூடியூப் சேனலில் ஆல்யாவும் சஞ்சீவும் இந்த தகவல்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர்.

image

அதில், “நான் கர்ப்பிணியாக இருப்பது உண்மைதான். கடந்த மாதம்தான் எங்களுக்கே தெரியும். இந்த சீரியலில் ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதால் சண்டைக் காட்சிகளும் இடம்பெறும். நானும் சஞ்சீவும் போய் இயக்குநரிடமும் டிவி சேனலிடமும் தயங்கியப்படி போய் சொன்னோம். ஆனால், அவர்கள் கைக்கொடுத்து சந்தோஷப்பட்டு ’கிடைப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று வாழ்த்தினார்கள். தற்போது நான்கரை மாதம் கர்ப்பிணியாக உள்ளேன். கர்ப்பிணியாக இருப்பதால், நான் சீரியலிலிருந்து விலகுவதாக வதந்திகள் வருகின்றன. அது எல்லாமே தவறான தகவல்கள். கர்ப்பிணியாக இருந்தாலும் நீங்கள்தான் நடிக்கவேண்டும் என்று எங்கள் இயக்குநர் வாழ்த்தியுள்ளார். அதனால், வதந்திகளைப் பரப்பவேண்டாம்” என்று பேசியுள்ளார் ஆல்யா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3d4zHEO

Post a Comment

0 Comments