Ad Code

Responsive Advertisement

"அரச பயங்கரவாதத்தின் பேரவலத்தை காட்டுகிறது ஜெய் பீம்” - திருமாவளவன் பாராட்டு

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டியிருக்கிறார். அவரது ட்விட்டர் பக்கத்தில்,

”சட்டம் - அது வலியவனைக் கண்டால் வளைந்து கொடுக்கும். எளியவனைக் கண்டால் எட்டி உதைக்கும் இது சிறுத்தைகளின் அரசியல் முழக்கம். காலம் காலமாய் வஞ்சிக்கப்படும் வதைக்கப்படும் பழங்குடி மக்களின் பாழும் வாழ்வைப் பாடமாய் விவரிக்கும் படமே ’ஜெய் பீம்’. இது அரச பயங்கரவாதத்தின் பேரவலம்” என்று பாராட்டியுள்ளார். ஏற்கெனவே, படத்தை பார்த்த முதல்வர் மு.க ஸ்டாலின் ‘ஜெய் பீம்’ படத்தை பாராட்டியுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

 image

இதற்கு, முன்னதாக இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய ஒரு வழக்கினையே அடிப்படையாகக் கொண்டு ‘ஜெய் பீம்’ படத்தினை எடுத்திருக்கிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3bHvbeB

Post a Comment

0 Comments