Ad Code

Responsive Advertisement

ஒரே இடத்தில் படப்பிடிப்பு: நீண்ட நாட்களுக்குப்பிறகு சந்தித்து கொண்ட ’விஜய்-சூர்யா’

விஜய்யின் ‘பீஸ்ட்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்புகள் ஒரே இடத்தில் நடந்ததால் படப்பிடிப்புக்கு இடையே விஜய், சூர்யா சந்தித்து உரையாடினர்.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளார்கள். அனிருத் இசையமைகிறார். இப்படத்தின் முதற்கட்பட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. இதுவரை 85 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையிலும் ஜார்ஜியாவில் எடுக்க திட்டமிட்டிருந்தது படக்குழு. அதன்படி, சென்னை படப்பிடிப்பு பெருங்குடியில் உள்ள சன் ஸ்டுடியோவில் நடந்துள்ளது. அதே இடத்தில் சூர்யா நடித்துவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

image

இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதனால், நீண்ட நாட்களுக்குப்பிறகு விஜய்யும் சூர்யாவும் சந்தித்து நட்பு ரீதியாக உரையாடியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், புகைப்படம் வெளியாகவில்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3wwgEfz

Post a Comment

0 Comments