நடிகர் பிரபாஸின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தென்னிந்திய சினிமா முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் பிரபாஸ் நடிப்பில் ‘ராதே ஷ்யாம்’ விரைவில் வெளியாகவிருக்கிறது. பிரபாஸ் ‘சலார்’, ‘ஆதி புருஷ்’ உள்ளிட்டப் படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் பிரபாஸ் தனது 25 படமாக உருவாகும் அடுத்தப் படத்திற்கு ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவுடன் இணைந்திருக்கிறார். சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கிய ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ உள்ளிட்டப் படங்கள் வசூல் சாதனை செய்தவை என்பதால், தற்போது பிரபாஸுடனான படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
‘ஸ்பிரிட்’ என்று படத்திற்குப் பெயரிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு படப்பிடிப்பைத் துவங்கும் இப்படத்தை பிரபாஸின் ‘சாஹோ’, ‘ராதே ஷியாம்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ ஆகிய படங்களைத் தயாரித்த டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட், யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2ZYjoGd
0 Comments