Ad Code

Responsive Advertisement

இம்மாத இறுதியில் துவங்கும் தனுஷ் - செல்வராகவன் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு

செல்வராகவன் - தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்குகிறது.

ஜவஹர் மித்ரனின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ’மாறன்’ படங்களில் நடித்து வரும் தனுஷ் செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்தில் நடிக்கவிருப்பதாய் அறிவித்திருந்தார். இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது. படப்பிடிப்பும் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்குவதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போதுவரை படப்பிடிப்பு துவங்கவில்லை. எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

image

த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட’நானே வருவேன்’ தயாரிப்பாளர் தாணுவுக்கு திருப்தியை தராததால் ‘புதுப்பேட்டை’ மாதிரி ஒரு தாதா கதையை உருவாக்கச் சொன்னதாகவும், பின்பு செல்வராகவன் கதையை மாற்றியிருப்பதோடு ராயபுரத்தில் மூன்று அண்ணன் தம்பிகளைகொண்டு கதை நடப்பதால் படத்திற்கு ‘ராயன்’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் சமீபத்தில் உறுதியான தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம்தான் தனுஷ் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பை முடித்தார். தற்போது, கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் ஓரிரு நாட்களில் முடியவுள்ளது. இதனால், இம்மாத இறுதியில் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3iHxbYt

Post a Comment

0 Comments