டாக்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் நேற்று வெளிவந்த டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் டாக்டர் திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடையும் என திரைத்துறையினர் கூறுகின்றனர். இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் மீண்டும் ஒரு திரைப்படத்தை உருவாக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஓரிரு வாரங்களில் முடிவடைந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் - பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னானி காதல்: இன்ஸ்டாகிராமில் ரொமான்ஸ்
நெல்சன் திலீப்குமர், தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படம் வெளியான பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அவர் இயக்கும் அடுத்த படத்திற்கான வேலைகள் தொடங்கும் என திரைத்துறையினர் கூறுகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2Yy0cix
0 Comments