Ad Code

Responsive Advertisement

“கனத்த இதயத்துடன் இதனை சொல்கிறேன்” : நாக சைதன்யா-சமந்தா பிரிவு குறித்து நாகர்ஜூனா உருக்கம்

டோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் நாகார்ஜுனா, தனது மகன் நாக சைதன்யா - சமந்தா பிரிவுக்கு காரணம் என்ன? என்பதை மனம் திறந்து சொல்லியுள்ளார்.

image

“கனத்த இதயத்துடன் இதனை சொல்கிறேன். நாக சைதன்யா - சமந்தா இடையேயான பிரிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நடப்பது அவர்களது தனிப்பட்ட விஷயமாகும். இருவரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். சமந்தா உடன் நாங்கள் அனுபவித்த பொழுதை ஒருபோதும் மறக்க முடியாது. அவர் என்றென்றும் எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இருவருக்கும் வேண்டிய சக்தியை இறைவன் கொடுத்தருளட்டும்” என தெரிவித்துள்ளார். 

இருவரும் இல்வாழ்க்கையில் இருந்து பிரிந்ததை அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா தெரிவித்திருந்தார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3D755gV

Post a Comment

0 Comments