Ad Code

Responsive Advertisement

’ஒருநாள் கூத்து’ இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் படத்தில் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

ட்ரீம் வாரிய பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது

’திட்டம் இரண்டு’, ‘பூமிகா’ படங்களுக்குப் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபுதேவாவின் புதிய படத்திலும், அர்ஜுனின் க்ரைம் த்ரில்லர் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

image

இப்படத்தை ’ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். இதனால்,எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தில் ஜித்தன் ரமேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசைமையக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3DTNkCi

Post a Comment

0 Comments