Ad Code

Responsive Advertisement

இரவு 12 மணி வரை நீடித்த பேச்சுவார்த்தை: பணப் பிரச்னை தீர்ந்ததால் வெளியானது 'டாக்டர்'

பணப் பிரச்னை தீர்ந்ததை அடுத்து 'டாக்டர்' திரைப்படம் திட்டமிட்டபடி இன்று வெளியானது.
 
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தை கேஜிஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்த தயாரிப்பு நிறுவனம், அதற்கான வியாபாரத்தையும் முடித்தது. ஆனால் ஜஸ்வந்த் பண்டாரி என்ற ஃபைனான்ஷியருக்கு தயாரிப்பு நிறுவனம் பெரும் தொகை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கான பேச்சுவார்த்தை இரவு 12 மணி வரை நீடித்த நிலையில், மதுரை அன்புச்செழியன், சிவகார்த்திகேயனுக்கு 27 கோடி ரூபாய் கடன் வழங்கி பிரச்னையை முடித்துள்ளார்.
 
இதுதொடர்பாக, நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே..எதிர் நீச்சலடி வென்று ஏற்று கொடிThumbs up #DoctorInTheatres from today watch it,enjoy it with your friends and family" என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனின் இந்தப் பதிவை ஷேர் செய்து, பட வெளியீட்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. 
image
அதேபோல், இயக்குர் லோகேஷ் கனகராஜூம் தன்னுடைய வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3lpwWmB

Post a Comment

0 Comments