
இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ’சிங்கப்பாதை’ என்ற புதிய நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், பிரியங்கா அருள் மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயன் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள ‘டாக்டர்’ வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது. அதோடு, ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ படமும் வெளியீட்டிற்கு தயாராய் உள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் அசோக் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘சிங்கப்பாதை’ என்னும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன் வரும் 20 ஆம் தேதி ‘டான்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சிறு இடைவேளைக்குப்பிறகு ’சிங்கப்பாதை’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவிருக்கிறது இப்படத்தை தயாரிக்கும் கேஜேஆர் ஸ்டூடியோஸ். மேலும், சிவகார்த்திகேயன் தற்போது நடித்துவரும் ‘டான்’ படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியும் அட்லீயின் உதவி இயக்குநர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2XuJi3n



0 Comments