Ad Code

Responsive Advertisement

இயக்குநர் பா.ரஞ்சித்துடன் அடுத்தப் படத்தில் இணையும் விக்ரம்?

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘மகான்’, மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துவரும் விக்ரம் அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், ’மகான்’படத்தின் படப்பிடிப்பும், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரமின் காட்சிகளும் சமீபத்தில்தான் நிறைவடைந்தது. இன்னும் ‘கோப்ரா’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விக்ரம் அடுத்ததாக பா.ரஞ்சித்துடன் இணைந்திருப்பதாகவும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் ரஞ்சித் இயக்கி சூப்பர் ஹிட் அடித்த‘மெட்ராஸ்’படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்தான் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

image

‘சார்பட்டா பரம்பரை’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் பா. ரஞ்சித் ’நட்சத்திரங்கள் நகர்கிறது’ படத்தை இயக்கி வருகிறார். அதோடு, ‘குதிரைவால்’, ‘ரைட்டர்’, மாரிசெல்வராஜ் - துருவ் விக்ரம் இணையும் படம் என பல படங்களையும் தயாரித்து வருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3h3vcfZ

Post a Comment

0 Comments