‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார் நடிகர் சிம்பு.
கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியான ’மஃப்டி’ படம் சூப்பர் ஹிட் அடித்து வசூல் சாதனையும் செய்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, சிவ ராஜ்குமார் கேரக்டரில் சிம்புவும், ஸ்ரீ முரளியாக கெளதம் கார்த்திக்கையும் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இப்படத்தை, ’சில்லுனு ஒருகாதல்’ இயக்குநர் கிருஷ்ணா இயக்குகிறார். பிரியா பவானிசங்கர் தாசில்தாராக நடிக்கிறார். மனுஷ்யபுத்திரன், டீஜே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது. இதில், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், மனுஷ்யபுத்திரன் காட்சிகள் படமாக்கப்பட்டன.
ஆனால், சிம்பு கலந்துகொள்ளவில்லை. தற்போது சென்னையில் நடந்துவரும் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இதனால், விரைவில் ‘பத்து தல’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தகவல்கள் தெரிக்கின்றன.
இதையும் படிக்கலாமே: அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் ‘விஜய் 66’ படப்பிடிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3tkQvic
0 Comments