Ad Code

Responsive Advertisement

சென்னையில் தொடங்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் பகுதியில் தொடங்கவிருக்கிறது.

’சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.

image

இப்படத்தின், முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு தொடங்கிய நிலையில், சமீபத்தில் அரசு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்ததால் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புத் துவங்கியது.காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த இப்படத்தின் 51 நாட்கள் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை, இயக்குநர் பாண்டிராஜும் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஐந்து நாட்கள் குட்டி பிரேக் எடுத்துவிட்டு சென்னை ஈசிஆர் பகுதியில் மீண்டும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு தொடரவிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதையும் படிக்கலாமே: படப்பிடிப்பின் போது நாகூர் தர்காவுக்குச் சென்று வழிபட்ட நடிகர் அருண் விஜய்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3yz4RfV

Post a Comment

0 Comments