இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் இணையும் படப்பிடிப்பு வரும் 8-ஆம் தேதி தொடங்குகிறது.
’இந்தியன் 2’படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை சமீபத்தில் அறிவித்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் ஷங்கர் - ராம் சரண் இணையும் ‘ராம் சரண் 15’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பாடலுடன் தொடங்கவிருக்கிறது. படம் குறித்த அறிவிப்பு வெளியானவுடனே முதலில் படக்குழு அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியது நடன இயக்குநர் ஜானி மாஸ்டரைத்தான். அதற்கடுத்துதான், இசையமைப்பாளர் தமனை அறிமுகப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகர் ரன்பீக் கபூர் கலந்து கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: செல்வராகவன் மகனை அள்ளிக்கொஞ்சும் சித்தப்பா தனுஷ்: புகைப்படத் தொகுப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3yI9nJa
0 Comments