Ad Code

Responsive Advertisement

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’: 51 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் 51 நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

’சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார். இப்படத்தின், முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு தொடங்கிய நிலையில், சமீபத்தில் அரசு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்ததால் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புத் துவங்கியது.

image

காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த இப்படத்தின் 51 நாட்கள் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை, இயக்குநர் பாண்டிராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில், ”51 நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்தது. எங்கள் படக்குழுவினர் வெயில், மழை எதையும் பொருட்படுத்தாமல் கடுமையாக நம்ப முடியாத உழைப்பை வழங்கினர். குறிப்பாக, சூர்யா, சன்பிக்சர்ஸ், ரத்னவேலு சாருக்கு நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: மிஷ்கினின் ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நிறைவு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2Y9JVzr

Post a Comment

0 Comments