இன்ஸ்டாகிராமில் இணைந்த 10 மாதங்களிலேயே 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை பெற்று சாதனை செய்திருக்கிறார் நடிகர் சிம்பு.
’ஈஸ்வரன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு‘மாநாடு’, ’பத்து தல’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த சிம்பு சில ஆண்டுகளுக்கு முன்பு டீ ஆக்டிவேட் செய்துவிட்டு ஒதுங்கியே இருந்தார். எதுவாக இருந்தாலும் அறிக்கை மூலமே தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ’ஈஸ்வரன்’படத்தில் நடிக்கும்போது மீண்டும் உடல் எடை மெலிந்து புதிய சிம்புவாக ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் சிலம்பரசன் டிஆர் என்ற பெயரில் கணக்குகளைத் தொடங்கினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் கணக்கை ஆரம்பித்தார். அதற்குள் 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் சிம்புவை பின்தொடர்கிறார்கள். இதன் மூலம், குறைந்த நாட்களில் அதிக ஃபாலோயர்ஸ்கள் பின்பற்றிய தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சிம்பு. அவருக்கு அடுத்தப்படியாக சூர்யா 366 நாட்களில் 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்ளையும், தனுஷ் 1025 நாளில் 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்களையும் பெற்றிருந்தனர் என்பது குறிப்படத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2Y5FpCf
0 Comments