Ad Code

Responsive Advertisement

ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தின் நாயகி கியாரா அத்வானி

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் முதல் முறையாக ராம் சரணை கதாநாயகனாக வைத்து நேரடியாக இயக்கும் தெலுங்கு படத்தின் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை சமீபத்தில் அறிவித்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிரார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகிகளாக கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.image

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் ஷங்கர் - ராம் சரண் இணையும் ‘ராம் சரண் 15’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பாடலுடன் தொடங்கவிருக்கிறது. பாலிவுட் கியாரா அத்வானியின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் நாயகி குறித்து அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. தெலுங்கில் ஏற்கெனவே சாம் சரணுக்கு ஜோடியாக "வினய வித்ய ராமா" திரைப்படத்தில் நடித்தவர் கியாரா அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3rIaZAN

Post a Comment

0 Comments