கொரோனாவை வெல்லும் ஆயுதமாக தடுப்பூசி விளங்குவதால் சின்னத்திரை நடிகர் நடிகைகள், பிரபலங்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வூட்டி வருகின்றனர்.
கொரோனாவின் இரண்டாவது அலை பரவலால் நாளுக்குநாள் உயிரிழப்புகள் அதிகரித்துவரும் சூழலில், நம்மை காக்கும் ஆயுதமாக தடுப்பூசிகள் விளங்குகின்றன என்று மருத்துவத்துறையினர் பரிந்துரைக்கின்றனர். அதன்படி, இந்திய மக்கள் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு வருகின்றனர்.அதேசமயம், தடுப்பூசிகள் குறித்த தவறான வதந்திகளால் மக்கள் அச்சப்பட்டு தவிர்த்தும் வருகின்றனர். இதனால், மக்களின் அச்சங்களை போக்குவதோடு, தங்களையும் காத்துக்கொள்ள திரைத்துறையினர் அரசியல்வாதிகள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்கள்.
(ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி தடுப்பூசி செலுத்திக்கொண்டார்)
{குக் வித் கோமாளியில் டைட்டில் வின்னரான கனி தடுப்பூசி செலுத்திக்கொண்டார்)
அவர்களோடு, சின்னத்திரை நடிகர்களும் பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு விழிப்புணர்வூட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
(தொகுப்பாளினி டிடி)
சின்னத்திரை நடிகைகள் ’ரோஜா’ சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி, நடிகர் சஞ்சீவ், ’குக்வித் கோமாளி’ புகழ் பிவித்ரா லக்ஷ்மி, கனி, தொகுப்பாளினிகள் கீர்த்தி சாந்தனு, அஞ்சனா, டிடி, ’பிக்பாஸ்’ புகழ் ரித்விகா, கணேஷ் வெங்கட் ராம் உள்ளிட்டப் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு விழிப்புணர்வூட்டி வருகிறார்கள்.
(நடிகர் கணேஷ் வெங்கட் ராம் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்)
(நடிகை ரித்விகா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்)
(நடிகை பவித்ரா லக்ஷ்மி தடுப்பூசி செலுத்திக்கொண்டார்)
(தொகுப்பாளினி அஞ்சனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்)
(நடிகர் சஞ்சீவ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்)
(தொகுப்பாளினி கீர்த்தி சாந்தனு தடுப்பூசி செலுத்திக்கொண்டார்)
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3i368r0
0 Comments