Ad Code

Responsive Advertisement

900 கி.மீ. பயணித்து காண முடியாமல் திரும்பிச்சென்ற ரசிகர்: வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா

தெலங்கானாவில் இருந்து 900 கிலோ மீட்டர் பயணித்து தன்னை காண முடியாமல் திரும்பிச் சென்ற ரசிகருக்காக நடிகை ராஷ்மிகா மந்தனா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் வசித்து வரும் நடிகை ராஷ்மிகாவை சந்திக்க தெலங்கானாவை சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்ற ரசிகர் 900 கிலோ மீட்டர் பயணித்த தகவல் அண்மையில் ஊடகங்களில் வெளியானது. குடகுப் பகுதியில் ஊரடங்கு அமலில் இருந்ததால், காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி, மீண்டும் தெலங்கானாவுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ராஷ்மிகா மந்தனா படப்பிடிப்புக்காக மும்பையில் முகாமிட்டிருப்பதையும் அவரிடம் தெரிவித்தனர். இதனால், ஏமாற்றத்துடன் அந்த ரசிகர் சொந்த ஊர் திரும்பிய நிலையில், அவருக்காக ராஷ்மிகா மந்தனா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் அவர், நிச்சயம் ஒரு நாள் ரசிகர்களை சந்திப்பதாக உறுதியளித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3havBNd

Post a Comment

0 Comments